சர்க்கரை நோயை உருவாக்கும் ஹார்மோன்!
ஒரு மனிதனின் உடல் செயல்பாடுகளை முறைப்படுத்துவதில் தொடர்புடைய மரபணுவானது, சர்க்கரை நோயை (டைப்-2) உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதாக சர்வதேச அளவிலான ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.
பொதுவாக சர்க்கரை நோய் என்பது வழிவழியாக வரக்கூடிய பரம்பரை வியாதி என்பது சமீப காலமாக அறியப்பட்டு வருகிறது. என்றாலும், முறையான உடற்பயிற்சி, தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வயதில் வரக்கூடிய சர்க்கரை நோயை தள்ளிப்போடுவதுடன், கட்டுப்பாட்டிலும் வைத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சர்வதேச அளவிலான குழு ஒன்று நடத்திய ஆய்வில் சர்க்கரை நோயை உருவாக்கக்கூடிய குறிப்பிட்டதொரு மரபணு பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது.
மெலோடோனின் -1பி எனும் மரபணு சுரப்பி இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டதாக அக்குழுவினர் கண்டறிந்தனர்.
தூக்கம் சரிவர இல்லாமல் போவதாலும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெலடோனின் ஹார்மோன் ஆனது, இரவில் ஒருவரின் தூக்கம் - எழுந்திருத்தல் சுழற்சி முறையைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த ஹார்மோனே இரத்தத்தில் மிக அதிக அளவு சர்க்கரை சேருவதற்கும், சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் காரணமாகிறது என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பாவைச் சேர்ந்த சுமார் 36 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
(மூலம் - வெப்துனியா)